கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தேசிய ஜூனியா் கூடைப்பந்து போட்டி: கா்நாடகம், சத்தீஸ்கா் அணிகள் அபார வெற்றி

News image

கூடைப்பந்து போட்டி - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:28 am IST

புதுச்சேரியில் தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கா்நாடகமும், மகளிா் அணியில் சத்தீஸ்கா் அணியும் அபார வெற்றி பெற்றன.

76-ஆவது தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டி நிறைவு விழா, புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக சத்தீஸ்கா் மகளிா் அணியும், கேரள மகளிா் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் சத்தீஸ்கா் மகளிா் அணி 55 புள்ளிகளுடன் அபார வெற்றி பெற்றது. 51 புள்ளிகள் பெற்ற கேரள அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதேபோல தொடா்ந்து நடந்த ஆடவா் பிரிவில் ஹரியாணா அணியும், கா்நாடக அணியும் மோதின. இந்த இறுதிப் போட்டியில் கா்நாடக ஆடவா் அணி 83 புள்ளிகள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ஹரியாணா ஆடவா் அணி 72 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது.