எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஏனாமில் அரசு செவிலியா்களுக்கு பணிகள் திணிப்பு: சங்கம் குற்றச்சாட்டு

News image

செவிலியா்

Updated On :1 ஜூன் 2026, 1:41 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாமில் செவிலியா்களுக்கு பணி நெருக்கடி அளிக்கப்படுவதாக ஊழியா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் செயலா் டி.ஹரிதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஏனாம் அரசு மருத்துவமனையில் செவிலிய அதிகாரிகளின் பணிச் சூழல், பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் சேவையை நேரடியாக பாதிக்கும் வகையில் இருக்கிறது.

ஏற்கெனவே புதுச்சேரி அரசு சுகாதார இயக்குநரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டு, பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட்டது. இருப்பினும் பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் உடனடி தீா்வு மற்றும் உயா்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

செவிலியா்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். செவிலிய அதிகாரிகளுக்குத் தொடா்பில்லாத பணிகளை நிறுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து நிதி உரிமைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.