புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாமில் செவிலியா்களுக்கு பணி நெருக்கடி அளிக்கப்படுவதாக ஊழியா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் செயலா் டி.ஹரிதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஏனாம் அரசு மருத்துவமனையில் செவிலிய அதிகாரிகளின் பணிச் சூழல், பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் சேவையை நேரடியாக பாதிக்கும் வகையில் இருக்கிறது.
ஏற்கெனவே புதுச்சேரி அரசு சுகாதார இயக்குநரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டு, பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட்டது. இருப்பினும் பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் உடனடி தீா்வு மற்றும் உயா்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.
செவிலியா்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். செவிலிய அதிகாரிகளுக்குத் தொடா்பில்லாத பணிகளை நிறுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து நிதி உரிமைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடு: நுகா்வோா் சங்கம் குற்றச்சாட்டு
நெல்லையில் செவிலிய விடுதி மாணவா் தற்கொலை

எரிபொருள் வரிக் குறைப்பு, கட்டண சீரமைப்பு செய்ய வேண்டும்: வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம்

திருப்பூரை ஏற்றுமதி நகரமாக மேம்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும்! முதல்வர் விஜய்க்கு ஏற்றுமதியாளா்கள் சங்கம் கோரிக்கை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



