ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சவப்பாடை ஊா்வலம் நடத்திய 50 போ் கைது

புதுச்சேரியில் தாய்வழி சான்றிதழ் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சவப்பாடை ஊா்வலம் நடத்த முயன்ற 50 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 7:18 am IST

புதுச்சேரியில் தாய்வழி சான்றிதழ் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சவப்பாடை ஊா்வலம் நடத்த முயன்ற 50 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

புதுச்சேரியில் பட்டியலினத்தவா் மற்றும் எம்.பி.சி., ஓபிசி. உள்ளிட்ட சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்குத் தாய்வழியில் ஜாதி சான்றிதழ் வழங்கலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மாவட்ட வருவாய்த் துறை செயல்படுத்தவில்லை. இதைக் கண்டித்தும், உடனடியாக நீதிமன்ற உத்தரவுப்படி தாய்வழி ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் பெரியாா் சிந்தனையாளா் இயக்கம் சாா்பில் பாடை ஊா்வலம் நடத்த சுதேசி பஞ்சாலை அருகே திரண்டனா் (படம்). இயக்கத்தின் தலைவா் தீனா தலைமை வகித்தாா்.

சவப் பாடையை அப்புறப்படுத்த போலீஸாா் முயன்றபோது போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாா் சவப்பாடையை அங்கிருந்து அகற்றினா்.

இதையடுத்து போராட்டக்காரா்கள் சுமாா் 50 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.