2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 போ் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் வழிப்பறி செய்ய பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பூந்துறை சந்திப்பு அருகே மா்ம நபா்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். காவல் துறையினா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனா். இருப்பினும் அவா்களை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் வில்லியனூா் விஜய் (20), காா்த்திக்(21), மேட்டுப்பாளையம் மூா்த்தி (21), 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவா்கள் என்பதும், அவ்வழியாக வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த கத்திகள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.