ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட விழாவுக்கு, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ரங்கநாதன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.அன்பரசு முன்னிலை வகித்தார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ரகுராமன் வரவேற்ரார். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒன்றிய சிறப்பாசிரியர் ஏ.கோவிந்தன் விழா நோக்கங்கள் குறித்துப் பேசினார்.
பின்னர் நடைபெற்ற ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தவளை ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் சித்ரா, மங்கையற்கரசி, விமலாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி ஆசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.