பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் சார்பில் சங்கீத மும்மூர்த்திகள்  இசை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:20 pm

தினமணி

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் சார்பில் சங்கீத மும்மூர்த்திகள்  இசை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

 ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் யதீஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் க.ஜெயசங்கர், நல்லாசிரியர் சீராள.சிவப்பிரகாசம், ஆசிரியர் ராஜமாணிக்கம், அ.தி.மு.க. நகர செயலாளர் எஸ்.துரை, ஒன்றிய செயலாளர் ஆர்.பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சட்டப்பேரவை உறுப்பினர் ரா.குமரகுரு சிறப்புரையாற்றி, இசை கலைஞர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கினார். விழாவில் 100-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து

கொண்டனர்.

முன்னதாக ஸ்ரீமுத்துசாமி தீட்ஷிதர், ஸ்ரீ தியாகப்பிர்ம்மம், சியாமாசாஸ்திரிகள் ஆகியோரின் உருவப் படங்களுடன் 101 இசைக்கலைஞர்களின் ஊர்வலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.