: விக்கிரவாண்டி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் உழவர் பெருவிழா நடைபெற்றது.
ஆசூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி வரவேற்றார். ஆசூர் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். விக்கிரவாண்டி வேளாண்மை அலுவலர் ஜோதிமணி தலைமை வகித்து திருந்திய நெல்சாகுபடி மற்றும் இதர தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
துணை வேளாண்மை அலுவலர் மா.சுப்பிரமணியன், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் எஸ்.ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் மூங்கில்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பாண்டியன் முன்னிலையிலும், வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சரசு ரத்தினசாமி முன்னிலையிலும், சின்னதச்சூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி ஆனந்த பாஸ்கரன் முன்னிலையிலும் உழவர் பெருவிழாக்கள் நடைபெற்றன.
இதில், வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. வேளாண்மைப் பொறியியல் துறையினர், தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
அமிதாப்பச்சன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 60

நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!


