போலீஸ் உடையில் வந்தவர்கள் விசாரித்ததில் பெண் சாவு?

திருக்கோவிலூர் அருகே போலீஸ் உடையில் வந்தவர்கள் விசாரித்ததில், பெண் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
Updated on
1 min read

திருக்கோவிலூர் அருகே போலீஸ் உடையில் வந்தவர்கள் விசாரித்ததில், பெண் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 திருக்கோவிலூரை அடுத்த வடியாங்குப்பம் கிராமத்துக்கு போலீஸ் உடையில் சிலர் புதன்கிழமை வந்துள்ளனர். முன்னதாக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது கடைக்குச் சென்றுள்ளனர்.
 அப்போது, கடையில் சோமசுந்தரத்தின் மனைவி அமுதா(40) மட்டுமே கடையில் இருந்துள்ளார். அவரிடம், பணம் பறிக்கும் நோக்கத்தில் தாறுமாறாக விசாரித்தனராம்.
 இதனால் பதட்டமடைந்த அமுதா, திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, திருக்கோவிலூர் - சந்தப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com