ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாராயம் கடத்தியவர் கைது

புதுச்சேரியிலிருந்து காரில் 350 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தவரை மயிலம் அருகே போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:12 am

தினமணி

புதுச்சேரியிலிருந்து காரில் 350 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தவரை மயிலம் அருகே போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
 மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அந்த காரில் 10 கேன்களில் 35 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டு பிடித்தனர்.
 இது குறித்து கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் மயிலம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் முருகன்(34) என்பதும், புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சாராயத்தை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. கடத்தப்பட்ட சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் இருக்கும்.
 இதையடுத்து, சாராயம் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுவிலக்கு போலீஸார் முருகனை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.