எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் முகப்பு அகற்றம்

உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கோயில் முகப்பு புதன்கிழமை அகற்றப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:16 am

தினமணி

உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கோயில் முகப்பு புதன்கிழமை அகற்றப்பட்டது.
 கூவாகம் கிராமத்தில் நெடுஞ்சாலை புறம்போக்கு நிலத்தில் எல்லைகாளியம்மன் கோயில் அமைத்து மேற்படி கூவாகம் கிராமத்தினர் வழிபாடு செய்து வந்தனர். இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்ததுடன், வழிபாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
 இதுதொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை வட்டாட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கோயில் முகப்பை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அகற்றினர். இதன் மூலம் கிராமத்தினர் வழிபாடு செய்யும் இடம் தனியார் வசமிருந்து மீட்கப்பட்டது.
 ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது திருநாவலூர் காவல் ஆய்வாளர் (பொ) ஷாகுல் அமீது, திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் ஜோகிந்தார், திருநாவலூர் காவல் ஆய்வாளர் தவமணி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் மணிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.