காவல் ஆய்வாளரைக் கண்டித்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் அமீது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், துணைச் செயலாளர் எம்.கே.பழனி, மாநில அலுவலகச் செயலாளர் எஸ்.செல்வராஜ், ஊ.கீரனூர் செயலாளர் ஆ.ராமராஜ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வே.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாநிலப் பொருளாளர் தீபா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் எஸ்.கணபதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பூமாலை, மாவட்ட துணைத் தலைவர்கள் வி.மார்த்தாண்டன், ஏ.சுபாஷினி, மாநிலக் குழு நிர்வாகிகள் சதீஷ், சத்யராஜ் உள்ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.