உளுந்தூர்பேட்டை அருகே வியாழக்கிழமை கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை வட்டம், பெரியசெவலையைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் பாலாஜி (18). சென்னையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது நண்பர்கள் ஊரான உளுந்தூர்பேட்டை வட்டம், கொரட்டங்குறிச்சி கிராமத்துக்குச் சென்றார்.
அங்கு தனது நண்பர்களுடன் உ.செல்லூரில் உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பாலாஜி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாலாஜியின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.