விழுப்புரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் துறவறம் பூணப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயின் குழுத் தலைவர் கியான் சந்த் போரா விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஆச்சார்யர் 1008 ஸ்ரீ நானேஷ்ஜியின் ஆசி பெற்ற, மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த செல்வி தீபா ஜெயின்(27) வருகிற வெள்ளிக்கிழமை விழுப்புரத்தில் துறவு ஏற்க உள்ளார்.
விழுப்புரம் ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் குருதேவர் ஸ்ரீ வியராஜ்ஜி உத்தரவின்படி, அவரது சிஷ்யர் ஸ்ரீ
வினோத்முனிஜி கலந்து கொண்டு தீபா ஜெயினுக்கு தீட்சை வழங்கி துறவு வாழ்க்கையைத் தொடக்கி வைக்கிறார்.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை கிழக்கு பாண்டி சாலை, சந்தான கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ சுஸ்வாணி மாதா கோயிலில் இருந்து திரு.வி.க. சாலையில் உள்ள ஸ்ரீ சண்முகா திருமண மண்டபம் வரை ஊர்வலம் நடைபெறும்.
தொடர்ந்து, அன்று மாலை சண்முகா திருமண மண்டபத்தில் வாழ்த்தரங்கம் நடைபெறும். இந்த விழாவில், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. பாரி, கல்வியாளரும் வருமான வரி அலுவலருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


