வளவனூர் அருகே சிறுவந்தாடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறுவந்தாடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் பதாகைகளை திங்கள்கிழமை இரவு போலீஸார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ராம்பாக்கம் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வளவனூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிகழ்ச்சி நாள் முடிந்த பிறகும் அகற்றப்படாத பதாகைகளால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் மாவட்டம் முழுவதும் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படியே, சிறுவந்தாடு பகுதியிலும் பதாகைகள் அகற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸாரின் இந்த சமாதானத்தை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.
மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


