செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரம் காவல் நிலையம், அனந்தபுரம் நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விக்கிரவாண்டி தாலுகா நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் அ.ஜேசுஜூலியஸ்ராஜ் தலைமை வகித்தார். தலைமைக் காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். அனந்தபுரம் காவல் நிலைய துணை ஆய்வாளர் நடராஜன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினார். ரோட்டரி பொருளர் முரளிதரன், ரோட்டரி செயலர் அலில், மதிவாணன், ரோட்டரி துணைச் செயலர் கார்த்திகேயன், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.