பாணாம்பட்டு துர்க்கை கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு

விழுப்புரம் அருகே பாணாம்பட்டு கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே பாணாம்பட்டு கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. 
சித்ரா பௌர்ணமியையொட்டி, பாணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  
விழா ஏற்பாடுகளை பாவாடை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com