விழுப்புரம் அருகே அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இ.நவீன் பிரசாத், டி.வசந்த் ஆகியோர் கட்டடத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் அதிநவீன கருவிகளை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கட்டுமானத்தை கட்டியெழுப்புவதற்கு சாரம் கட்டப்படுகின்றன. இதற்கு சவுக்கு கம்பு அல்லது கம்பிகள் பயன்படுத்தப்படுகிறது.
சவுக்கை கம்பு பயன்படுத்தினால் அவற்றுக்கு பயன்காலம் குறையும். இரும்பு கம்பிகளை பயன்படுத்தினால் அதனுடைய வலிமையும், பயன்படும் காலமும் அதிகம் வரும். ஆனால் அதற்கான செலவு அதிகம். இந்த இரண்டு முறைகளிலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு என்பது மிக மிகக் குறைவு.
ஆகவே, தொழிலாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, லிப்ட் போன்றதொரு சதுரத்தை வடிவமைத்து உள்ளோம். அதில், சங்கிலியின் உதவியால் மேலேயும், கீழேயும் முக்கியமாக பக்கவாட்டிலும் செல்லலாம். இவை அனைத்தையும் தாங்கி பிடிக்கும் கம்பியை கட்டடத்தின் மேலே பொருத்தலாம். இந்த கண்டு பிடிப்பின் உதவியால் ஒரே நேரத்தில் பல தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தங்கள் பணியை செய்து முடிப்பர் என்றனர்.
இந்த நவீன கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரியின் தலைவர் விசயா முத்துவண்ணன், முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன், கல்லூரியின் முதல்வர் ந.அன்பழகன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









