பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

காச நோய் கண்டறியும் முகாம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே காச நோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே காச நோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் மாவட்ட காசநோய் தடுப்பு மையம் சார்பில், கிராமங்களில் காச நோய் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 அந்த வகையில், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்திக்குப்பம் கிராமத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும், காச நோய் கண்டறியும் முகாமும் நடைபெற்றது.
 மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுதாகர் தலைமை வகித்தார். காச நோய் மைய மருத்துவ அலுவலர் நேதாஜி சுபாஷ்
 சந்திரபோஸ், ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார், நலக் கல்வியாளர் மெகபூப்பாஷா, முதுநிலை சிகிச்சை பிரிவு மேற்பார்வையாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்தியாவில் காச நோயின் பாதிப்புகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கவும், தமிழகத்தில் காச நோய் பாதிப்பை முற்றிலும் அகற்றவும் மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகள், விழுப்புரம் மாவட்டத்தில் காச நோய் தடுப்புப் பணிகள் குறித்து பேசினர்.
 இதைத் தொடர்ந்து, சித்தானங்கூர் நிலா கலைக் குழுவினரின் காச நோயின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. காச நோய் பிரிவு பணியாளர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சக்திவேல், ஜெகன்நாதன், முருகன், திருவெண்ணெய்நல்லூர் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.