டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி

கல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி, பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய

Updated On :25 டிசம்பர் 2018, 10:03 am IST

கல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி, பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் வீ.கோவிந்திராசன் தலைமை வகித்தார். பணி ஓய்வுபெற்ற மின்துறை வி.வெங்கட்ராமன், பொருளாளர் இரா.நல்லமுத்து, ஏமப்பேர் வே.பூசமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் செ.வ.மதிவாணன் வரவேற்றார். "ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப் பணியில் சிறப்பாக பணிபுரிந்து, பின்னர், தொல்லியல் துறையில் ஆழ்ந்த ஆராய்ச்சிகளைச் செய்து, தமிழரின் நாகரிகத்துக்கான ஆதார அடிப்படைகளை சிறப்பாக வெளிப்படுத்தியவர்' என சங்கராபுரம் திருக்குறள் பேரவையின் செயலாளர் அ.லட்சுமிபதி புகழாரம் சூட்டினார்.
தியாகதுருகம் கவிஞர் அரங்க.மின்னல் திருக்குறளின் "இரவு' எனும் 106-ஆவது அதிகாரத்துக்கு விளக்க உரையாற்றினார்.
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவி அ.அர்சா சாம்லா "பாட்டுக்கொரு புலவன் பாரதி' எனும் தலைப்பில் பேசினார். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசை சங்க துணைத் தலைவர் வழங்கிப் பாராட்டினார். 
தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் பெ.ஆராவமுதன் தலைமையில் "என் பார்வையில் நம் பாரதி' எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. நாகலூர் துணைப் பதிவாளர் மு.பெ.தனக்கண்ணு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.