மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாரதியார் தமிழ்ச் சங்க விழா

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள், உலக அன்னையர் தினம், உலக செவிலியர் தினம், தொழிலாளர் தினம் என நாற்பெரும் விழாவாக தியாகதுருகம் ஊராட்சி

News image
Updated On :5 ஜூன் 2018, 5:02 am

DIN

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள், உலக அன்னையர் தினம், உலக செவிலியர் தினம், தொழிலாளர் தினம் என நாற்பெரும் விழாவாக தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் அரங்க.செம்பியான் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட தமிழ்க் கவிஞர் பேரவை மகளிரணிச் செயலர் அரங்க.அமுதமொழி, திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பாவலர் துரை.ராமகிருஷ்ணன், சங்கராபுரம் ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் முகமது ரபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் வரவேற்றார். 
"பத்துப்பாட்டில் தமிழர் வாழ்வியல்' என்ற தலைப்பில் விழுப்புரம் முதுகலை ஆசிரியர் பா.சூரிய நாராயணா, தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்த் தொண்டு தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தெ.சாந்தகுமார், உலக அன்னையர் தினம் தலைப்பிலும், தமிழாசிரியை கவிஞர் காயத்ரி சிவபிரகாஷ், தொழிலாளர் தினம் தலைப்பில் மாவட்ட கலைஇலக்கியப் பேரவைச் செயலர் மு.கலியபெருமாள், நெஞ்சொடு கிளைத்தல் திருக்குறள் அதிகாரத்துக்கு கவிமாமணி முத்தமிழ் முத்தன் நாவலடியார் பாடல்களில் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் திருவண்ணாமலை பாவரசு மு.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
மக்கள் பாடகர் தேசப்பிரியன், கவிஞர் பாலமுருகன் தமிழிசைப் பாடல்களை பாடினர். விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் ஏ.வி.சரவணனுக்கு கள்ளக்குறிச்சி சான்றோர் பேரவைத் தலைவர் ஆசுகவி.ஆராவமுதன் தோழர் ஜீவானந்தம் விருது வழங்கி பேசினார். சேலம் கவிஞர் பொன்.சந்திரன் தலைமையில் தூய்மையை போற்றுவோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் தவமணிகுமார், கவிஞர் கூ.பிச்சப்பிள்ளை, டி.கோவிந்தராஜ், ஆர்.வேல்முருகன், சாத்தனூர் அம்மாசி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பாரதியார் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் தி.வெங்கடாசலபதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.