போலி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளிய மூவர் கைது: 4 லாரிகள் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே, போலி அனுமதி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

திருவெண்ணெய்நல்லூர் அருகே, போலி அனுமதி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை அதிகாலை, திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் - கரடிப்பாக்கம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கினர். போலீஸாரைக் கண்டதும் அதன் ஓட்டுநர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்து ஆவணங்களை ஆய்வு செய்த போது, போலி அனுமதி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
 இதுதொடர்பாக எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலு (42), திண்டிவனத்தை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(33), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com