நெய்வேலி அருகே மின் கம்பத்தின் மேல் அமர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் புதன்கிழமை உயிரிழந்தார்.
நெய்வேலி அருகே உள்ள கம்மாபுரம் ஒன்றியம், ஓட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மகன் சரத்குமார் (26). இவர், தற்போது நடைபெற்று வரும் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியில் சாலையோரங்களில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, வேறு இடங்களில் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்தப் பணியில், கொம்பாடிக்குப்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 25 பேர் பணியாற்றி வருகின்றனராம்.
இந்த நிலையில், புதன்கிழமை ரோமபுரி அருகே உள்ள உயரழுத்த மின் பாதை மின் கம்பத்தில் ஏறி அமர்ந்து, சரத்குமார் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின் இணைப்பு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் பாய்ந்து சரத்குமார் மின் கம்பத்திலேயே கருகி உயிரிழந்தார்.
தகவலறிந்த சரத்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் உயிரிழந்த சரத்குமாரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விருத்தாசலம் வட்டாட்சியர் ஸ்ரீதர், மின்வாரிய உயரதிகாரி ஜெயந்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர் பண்ருட்டி சுந்தரவடிவேல், சேத்தியாதோப்பு ஜவஹர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால், முற்பகல் 12 மணி முதல் மாலை 4.40 மணி வரை போக்குவரத்துத் தடைபட்டது.
உயிரிழந்த சரத்குமாரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்றப் பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

