தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னையில் தனது வழக்கமான பணிகளுடன், அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (மே 18) காரில் வரும் அவர், வானூர், ஆரோவில், கோலியனூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் அன்று மாலை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை வருகிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி, பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடியில் ஏப்.19-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

