விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய அறிமுகக் கூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழச் சங்கத் தலைவர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் அனந்தகுமார் வரவேற்றார். தமிழ்ச் சங்க நெறியாளர் சஞ்சீவிராயன் தொடக்க உரையாற்றினார். திண்டிவனம் தமிழ் ஆசிரியர் அன்பழகன், சங்க துணைச் செயலாளர் தமிழநம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், மயிலம் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் மா.சற்குணம் கலந்து கொண்டு, நன்னெறி பாடல்கள் குறித்து இயக்கிய அறிமுகம் செய்து பேசினார்.
தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பழமலய், பன்னீர்செல்வம், விக்கிரமன், அன்பழகன், மகேந்திரன், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.65.98 கோடியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலம் ஆய்வு

ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் மாயம்

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு






