விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி முதல் விழுப்புரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. மாலை வரையில் சாரல் மழையாக தொடர்ந்தது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது. மேலும், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதேபோல, காணை, வளவனூர், விக்கிரவாண்டி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பகல் முழுவதும் மழை பெய்தது. திண்டிவனத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து, பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மாவட்டத்தில் சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்தது. கள்ளக்குறிச்சியில் பிற்பகல் சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளிர்ந்த சூழல் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

ஹங்கேரியில் 16 ஆண்டுகால பிரதமரின் ஆட்சிக்கு முடிவு - பீட்டா் மேக்யாா் தலைமையில் புதிய அரசு அமைகிறது

மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையர் பொறுப்பேற்பு

மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா விவாதம்: நாளை அனைத்துக் கட்சிகள் கூட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

