விழுப்புரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 150 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள சிங்கப்பூர் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலையிலான அதிகாரிகள், அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். குடியிருப்பு வளாகத்தின் முதல் தளத்தில் சம்சுதீன் மகன் அஷ்ரப் (48) என்பவரின் கிடங்கில் 150 கிலோ எடையிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.ஒரு லட்சம் இருக்கும். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களில் சிலவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதன் முடிவுகளைப் பொருத்து அஷ்ரப் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று நியமன அலுவலர் வரலட்சுமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


