புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த இளைஞரை திண்டிவனம் அருகே கிளியனூரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிளியனூர் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, புதுச்சேரியிலிருந்து வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, சோதனையிட்டனர். அதில், சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 191 மதுப் புட்டிகள் இருந்தன.
இது தொடர்பாக காரில் இருந்த நபரிடம் விசாரித்ததில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஏனத்தூரைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தோஷ் (27) என்பதும், புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு மதுப்புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து, மதுப் புட்டிகளுடன் காரை கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


