சங்கராபுரத்தில் குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் வங்கிக் கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கடலூர் மண்டல துணை மேலாளர் சேகர் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, அரிமா மாவட்டத் தலைவர் ஜனனி மகாலிங்கம், ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் குமார் அனுகுல் வரவேற்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தார். குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கிளையை சார்நிலை கருவூலக அலுவலர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். ஏடிஎம் நிலையத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வங்கியின் கடலுôர் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னோடி வங்கியாக சங்கராபுரம் இந்தியன் வங்கி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.6,600 கோடி இருந்த வர்த்தகம், நிகழாண்டு ரூ.8,400 கோடியாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள், ஓய்வூதியர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, சங்கராபுரம் இந்தியன் வங்கிக்கு 5 பேர் வங்கித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் வீடுகள் தேடி வரும் இவர்கள் முலம் ரூ.10 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். வயதானவர்கள் வங்கிக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து!

உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைக்குத் தடை விதித்த ஃபிஃபா!

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி
இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


