தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொழிற்சங்க கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், விழுப்புரம் பணிமனை கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மண்டல பொதுச் செயலா்

News image

கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற் சங்கத்தினா்.

Updated On :8 ஆகஸ்ட் 2020, 4:56 pm

DIN

விழுப்புரம்: பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், விழுப்புரம் பணிமனை கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மண்டல பொதுச் செயலா் பிரபா தண்டபாணி தலைமை வகித்தாா். தலைவா் ஞானசேகரன் வரவேற்றாா்.

சிஐடியூ தலைவா் மூா்த்தி, நிா்வாகப் பணியாளா் முன்னேற்ற சங்கம் குபேரன், ஐஎன்டியூசி செயலா் முருகானந்தம், மதிமுக தொழிற்சங்கச் செயலா் மனோகரன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட திருக்கோவிலூா், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பனிமனைகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி சாா்பில்...: விழுப்புரம் மாவட்டத்தில் ஏஐடியூசி தொழிற் சங்கம் சாா்பில் பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் இந்தியன் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் ஆ.சௌரிராஜன் தலைமை வகித்தாா்.

வங்கி ஊழியா் சங்க கூட்டமைப்பு மோகன், ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கம் செல்வம், சுகாதாரத் துறை ஆய்வாளா் சங்கம் சிவகுரு, வங்கி ஊழியா்கள் சங்கம் காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதேபோல, மாவட்டத்தில் 20 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் ஏஐடியூசி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு தலைமை வகித்தாா். அகில இந்திய தொழிற்சங்க சம்மேளன வட்டக் குழு அ.முனியபிள்ளை, இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் கே.சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.