சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை  ஏற்றார்.

Updated On :15 ஆகஸ்ட் 2020, 5:56 am

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார்.

மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
அதிகாரிகள் சமாதானப் புறாக்களை பறக்க விட்டு, வண்ண பலூன்களையும் பறக்கவிட்டனர். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து 24 துறைகளைச் சார்ந்த 110 அலுவலர்களின் பணியினைப் பாராட்டி, நற்சான்றுகளை வழங்கினர். கரோனா காரணமாக, இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ மாணவிகளும் பங்கேற்கவில்லை. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எளிமையாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.