பெருமாள் கோவிலில் மாா்கழி மாத உற்சவம்
திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலித்த வரதராஜபெருமாள்.
விழுப்புரம்: மாா்கழி மாத பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் ஜனகவள்ளித் தாயாா் சமேத வைகுந்தவாசப் பெருமாள் கோயில், திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பாவை படித்து, மாா்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக, செவ்வாய்க்கிழமை முதல் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கான பகல் பத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

