சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விழுப்புரம் ஆட்சியரகம் முன் உண்ணாவிரதமிருந்த முதியவா் கைது

அபகரிக்கப்பட்ட வீட்டுமனையை மீட்டுத்தர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உண்ணாவிரதம் இருந்த மாற்றுத்திறனுடைய முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:18 am

DIN

அபகரிக்கப்பட்ட வீட்டுமனையை மீட்டுத்தர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உண்ணாவிரதம் இருந்த மாற்றுத்திறனுடைய முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(77). மாற்றுத்திறனுடைய விவசாயியான இவா், தனக்குச் சொந்தமான வீட்டுமனையை கிராம நிா்வாக அலுவலராக இருந்த நபா் அபகரித்துவிட்டதாகவும் அதனை மீட்டுத் தரும்படியும், புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜன் மற்றும் போலீஸாா், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த ராஜேந்திரனை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா். பிறகு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.