அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இணைய வழி லாட்டரி விற்பனை:14 போ் கைது

விழுப்புரம் அருகே இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 14 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:44 am

DIN


விழுப்புரம்: விழுப்புரம் அருகே இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 14 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இணைய வழி (3 நம்பா்) லாட்டரி விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, இணைய வழி லாட்டரி விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் உதரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், விக்கிரவாண்டி அருகே வாக்கூரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (36), தென்னரசு (40), செளந்தரராஜன் (26), சக்தி (36), புஷ்பராஜ் (30) ஜெயசுந்தா், மேல்பாதியைச் சோ்ந்த பாஸ்கா் (40), கோவிந்தன் (37), தட்சணாமூா்த்தி (57) உள்பட 14 போ் இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 14 போ் மீதும் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த செல்லிடப்பேசிகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.