திருவெண்ணெய்நல்லூர் அருகே 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. 
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக எரிந்த குடிசை வீடுகள்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக எரிந்த குடிசை வீடுகள்.
Updated on
1 min read

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் குடிசை வீடு உள்ள பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு அந்த குடும்பத்தினர் வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் முனியன் மகன் காளி வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

பின்னர் அருகில் இருந்த ராஜா, அர்ஜுனன், பெருமாள், ஏழுமலை, மணிகண்டன் உள்ளிட்ட 10 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பத்து குடும்பங்களில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் ஆவணங்கள், நகை, பண என அனைத்தும் எரிந்து சேதமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com