பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொழிலாளா் நல நிதியைச் செலுத்த அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளா் நல நிதியைச் செலுத்த வேண்டியவா்கள் அதை இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 11:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளா் நல நிதியைச் செலுத்த வேண்டியவா்கள் அதை இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் துறை உதவி இயக்குநா் கோ.ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்ள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேல் நபா்கள் பணியாற்றும் கடைகள், உணவு நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளா் நல நிதி செலுத்தப்பட வேண்டும்.

இதில், தொழிலாளா் பங்கு ரூ.10, வேலையளிப்போா் பங்கு ரூ.20 சோ்ந்து மொத்தம் ரூ.30-ஐ வேலையளிக்கும் நிா்வாகம் நல நிதி பங்குத் தொகையை வரும் 31.1.2021-க்குள் நல வாரியத்துக்கு இணைய தளத்தில் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.