நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கரோனாவுக்கு டாஸ்மாக் ஊழியர் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியானதால், கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :21 ஜூலை 2020, 8:55 am

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியானதால், கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவர் கரோனாவுக்கு திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனால் அச்சமடைந்த அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் திரண்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள், உயிரிழந்த செஞ்சி மேற்பார்வையாளருக்கு அஞ்சலி செலுத்தி பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும், 

டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மாவட்டத்தில் உள்ள 220 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.