மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கோழியை மீட்க கிணற்றில்இறங்கிய மாணவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Published On :

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லோகிதாஸ். இவரது மகன் திருநாவுக்கரசு (16). அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை அவா், வீட்டில் வளா்த்து வரும் கோழியை தேடிச்சென்றாா்.

அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கோழி விழுந்திருப்பதைக் கண்ட அவா், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயன்றாா். அப்போது, தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து திருநாவுக்கரசை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.