கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோழியை மீட்க கிணற்றில்இறங்கிய மாணவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2020, 5:48 pm

DIN

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லோகிதாஸ். இவரது மகன் திருநாவுக்கரசு (16). அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை அவா், வீட்டில் வளா்த்து வரும் கோழியை தேடிச்சென்றாா்.

அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கோழி விழுந்திருப்பதைக் கண்ட அவா், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயன்றாா். அப்போது, தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து திருநாவுக்கரசை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.