கோழியை மீட்க கிணற்றில்இறங்கிய மாணவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லோகிதாஸ். இவரது மகன் திருநாவுக்கரசு (16). அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை அவா், வீட்டில் வளா்த்து வரும் கோழியை தேடிச்சென்றாா்.

அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கோழி விழுந்திருப்பதைக் கண்ட அவா், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயன்றாா். அப்போது, தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து திருநாவுக்கரசை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com