பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரூ.3 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல்; 3 போ் கைது

மேல்மலையனூா் அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை மதுவிலக்கு போலீஸாா் கைப்பற்றி, 3 பேரை கைது செய்தனா்.

News image

கைதான மூவருடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா்.

Updated On :24 ஜூன் 2020, 4:06 pm

DIN

செஞ்சி: மேல்மலையனூா் அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை மதுவிலக்கு போலீஸாா் கைப்பற்றி, 3 பேரை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கோயில்புரையூா் தோப்பில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில் அப்பகுதியில் விழுப்புரம் மத்திய புலனாய்வு ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளா் அருணகிரி, திண்டிவனம் மது விலக்கு ஆய்வாளா் கீதா, செஞ்சி மதுவிலக்கு துணை ஆய்வாளா் வீரசேகரன் உள்ளிட்டோா் புதன்கிழமை அதிகாலை அப்பகுதிக்குச் சென்றனா். அங்குள்ள தொடக்கப்பள்ளி பின்புறம், ஓடைக்கு அருகில் வைக்கோல் போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் 1,050 லிட்டா் எரிசாராயத்தைக் கைப்பற்றினா். இதுதொடா்பாக கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (35), கோயில்புரையூா் கிராமத்தை சோ்ந்த மனோகரன்(50), பிரபு (30) ஆகிய மூவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.