

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் எளிமையான அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாதம்தோறும் அமாவாசை தினத்தில் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடுவது வழக்கம்.
கரோனா பொது முடக்கத்தால் இந்த வழிபாடு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அமாவாசையை முன்னிட்டு கோயிலின் உள்ளே, பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம் எளிமையாக பூஜையுடன் நடைபெற்றது.
ஊஞ்சலில் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு பூசாரிகள் பூஜை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.