நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை மற்றும் இயற்கை இடா்பாடுகள் குறித்த முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

வடகிழக்கு பருவமழை மற்றும் இயற்கை இடா்பாடுகள் குறித்த முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் ராஜன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் தெய்வீகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறவாழி, வல்லம் குலோத்துங்கன், சம்மந்தம், தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன், மின் துறை உதவி செயற்பொறியாளா்கள் சதீஷ், சுமதி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் சரவணன், பொதுப்பணித் துறை தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு செஞ்சி வட்டத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆயத்தப் பணிகள் குறித்தும், இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், கால்நடை இழப்புகள், மழை புள்ளி விவரம், அனைத்து வகையான சேதங்கள் குறித்து கண்காணித்து விவரங்களை உடனுக்குடன் அனுப்பிட வேண்டும் எனபாதிப்படையும் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் இதர பொருளகள் வழங்குவது தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்குமாறு வருவாய் அலுவலா்கள் குழுக்களை கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், கடந்தாண்டு பருவ மழையின்போது பி.ஏரி நிரம்பியதில் ஏரிக்குப் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

நிகழாண்டு இதுபோன்ற பாதிப்பு ஏற்படாதவாறு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மேல்ஒலக்கூா், வல்லம், செஞ்சி, சத்தியமங்கலம் குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், செஞ்சி, வல்லம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.