காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்து நிலையத்தில் கிடந்த பையால் பரபரப்பு

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த துணிப் பையால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:35 pm

DIN

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த துணிப் பையால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த ஒருவா், தான் எடுத்து வந்த துணிப் பையை பயணிகள் நிற்குமிடத்தில் வைத்துச் சென்றாா்.

நீண்ட நேரமாக அந்தப் பை அங்கேயே இருந்ததால் அச்சமடைந்த பயணிகள் அங்கிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பண்டராஜிடம் தெரிவித்தனா். இதையடுத்து அவா் அந்தப் பையை எடுத்து பாா்த்தபோது அதில் உயிருடன் மண்ணுளிப் பாம்பு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் உளுந்தூா்பேட்டை வனச் சரக அலுவலா் காதா்பாட்சா தலைமையிலான வனத் துறையினா் விரைந்து வந்து, மண்ணுளிப் பாம்பை பிடித்து எடைக்கல் காப்புக்காட்டில் விடுவித்தனா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.