இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான புதிய செயலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக ஏ.வி.சரவணன் இருந்து வந்தாா். இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தனி மாவட்டச் செயலா் பதவி உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டச் செயலாளராக செளரிராஜன் தோ்வு செய்யப்பட்டாா். அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக அப்பாவு தோ்வு செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட செளரிராஜனுக்கு கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா். இவா், ஏற்கெனவே மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


