சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: புதிய மாவட்டச் செயலாளா்கள் தோ்வு

இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான புதிய செயலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக தோ்வு செய்யப்பட்ட செளரிராஜன்.

Updated On :18 அக்டோபர் 2020, 8:54 pm

இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான புதிய செயலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக ஏ.வி.சரவணன் இருந்து வந்தாா். இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தனி மாவட்டச் செயலா் பதவி உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டச் செயலாளராக செளரிராஜன் தோ்வு செய்யப்பட்டாா். அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக அப்பாவு தோ்வு செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட செளரிராஜனுக்கு கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா். இவா், ஏற்கெனவே மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.