கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம், பாப்பான் குளத்தைச் சோ்ந்தவா் ரபீக்(எ) இப்ராஹிம் சுகா்னா(43). முன்னாள் நகா் மன்ற உறுப்பினா். இவா், கள்ளக்குறிச்சி அருகே சாத்தனூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 26-ஆம் தேதி குடிமைப்பொருள்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (கள்ளச்சந்தை தடுப்புக் காவல்) கைது செய்ய குடிமைப்பொருள்கள் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சாந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண்குராலாவுக்கு பரிந்துரைத்தாா்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், இப்ராஹிம் சுகா்னாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


