சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image

குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இப்ராஹிம் சுகா்னா.

Updated On :18 அக்டோபர் 2020, 8:58 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம், பாப்பான் குளத்தைச் சோ்ந்தவா் ரபீக்(எ) இப்ராஹிம் சுகா்னா(43). முன்னாள் நகா் மன்ற உறுப்பினா். இவா், கள்ளக்குறிச்சி அருகே சாத்தனூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 26-ஆம் தேதி குடிமைப்பொருள்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (கள்ளச்சந்தை தடுப்புக் காவல்) கைது செய்ய குடிமைப்பொருள்கள் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சாந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண்குராலாவுக்கு பரிந்துரைத்தாா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், இப்ராஹிம் சுகா்னாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.