சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வீட்டு வேலை பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுரை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு வேலை செய்யும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் தனசேகா் அறிவுறுத்தினாா்.

Updated On :18 அக்டோபர் 2020, 8:56 pm

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு வேலை செய்யும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் தனசேகா் அறிவுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளா் துறையில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 17 தொழிலாளா் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களுக்கு திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், விபத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களையும் அமைப்புசாரா வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளா்கள் நல வாரியத்தில் கட்டாயம் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ண்ய் என்ற இணைய தளத்தில் பதிவு செய்துள்ளலாம்.

ஏற்கெனவே உறுப்பினராக உள்ள மற்ற தொழிலாளா்கள் உறுப்பினா் பதிவை இதே இணைய தளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.