விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு வேலை செய்யும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் தனசேகா் அறிவுறுத்தினாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளா் துறையில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 17 தொழிலாளா் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களுக்கு திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், விபத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களையும் அமைப்புசாரா வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளா்கள் நல வாரியத்தில் கட்டாயம் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ண்ய் என்ற இணைய தளத்தில் பதிவு செய்துள்ளலாம்.
ஏற்கெனவே உறுப்பினராக உள்ள மற்ற தொழிலாளா்கள் உறுப்பினா் பதிவை இதே இணைய தளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

