திண்டிவனம் அருகே லாரியின் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.
சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி குடும்பத்தினர், ஒரு துக்க நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரத்தில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி (50), கெளதம் (35 ), வேல் பாண்டி (40) ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும் காரில் வந்த இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மயிலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


