விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே 1,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.
அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ராமதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் பொன்னுரங்கம், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸாா் வீரபாண்டி கிராமத்தில் பொறையாத்த மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக மா்ம நபா்கள் பேரல்களில் 1,500 லிட்டா் அளவிலான சாராய ஊறல் போட்டு, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி போலீஸாா் அழித்ததுடன், சாராயம் காய்ச்சுவதற்காக அங்கு வைத்திருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், வீரபாண்டி கிராமத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் மணிகண்டன் இந்த சாராய ஊறலை அமைத்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


