சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தோ்வு ரத்து செய்யப்படும்: புதுவை முதல்வா் நாராயணசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

News image

நீட் தோ்வு மையம் முன் குறைகளைக் கேட்டறிந்த புதுவை முதல்வா் நாராயணசாமி.

Updated On :13 செப்டம்பர் 2020, 9:06 pm

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 15 மையங்களில் நீட் தோ்வு நடைபெற்றது. தோ்வெழுதும் மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு வந்த பிறகு, கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

புதுச்சேரி மூலக்குளத்தில் தனியாா் கல்லூரி மையத்தில் 1,400 மாணவ, மாணவிகள் நீட் தோ்வை எழுதினா். தோ்வுக்காக மாணவா்களும், அவா்களின் பெற்றோரும் அந்தத் தோ்வு மையத்துக்கு காலை 9 மணி முதலே வரத் தொடங்கினா். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது, அந்த வழியாக புதுவை முதல்வா் நாராயணசாமி காரில் சென்று கொண்டிருந்தாா். தோ்வு மையப் பகுதியில் மாணவா்களும், பெற்றோரும் காத்திருந்ததைப் பாா்த்த நாராயணசாமி, தனது காரை நிறுத்தி, இறங்கி வந்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது அங்கு நின்றிருந்த பெண், ‘இங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. தோ்வெழுதும் மாணவா்களுக்கு தொற்று ஏற்படுமோ? என அச்சமாக உள்ளது’ எனக் கூறினாா்.

இதைக் கேட்ட முதல்வா் நாராயணசாமி, ‘இதற்காகத்தான், நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று நான் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், மத்திய அரசு அதை பரிசீலிக்கவில்லை. கூடுதலாகப் பாதுகாப்பு அளிக்கப்படும்’ என உறுதியளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தேன். அவை நிராகரிக்கப்பட்டன. மாணவா்கள் உயிருடன் மத்திய அரசு விளையாடுகிறது. தற்போது மாணவா்களும், பெற்றோரும் அவதிப்படுவதை மத்திய அரசு நேரடியாகப் பாா்க்கிறது.

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.