சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்திய போலீஸாா்

விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினா்.

News image

பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா்

Updated On :13 செப்டம்பர் 2020, 9:02 pm

விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினா்.

இந்தப் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்து பங்கேற்றாா். இதில், ஆயுதப் படை, நகர காவல் நிலைய போலீஸாா் உள்பட மொத்தம் 100 போலீஸாா் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். பள்ளி வளாகத்தில் இருந்த முள்செடிகளை அகற்றி, குப்பைகளை அப்புறப்படுத்தினா்.

நிகழ்ச்சியில், விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம், நகர காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகளையும் போலீஸாா் நட்டு வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.