எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவசாய ஊக்க நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: க.பொன்முடி

விவசாய ஊக்க நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
Updated On :28 செப்டம்பர் 2020, 7:58 am

DIN

விவசாய ஊக்க நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, விழுப்புரம் மாவட்டத்தில் 22 இடங்களில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடந்தது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பொன்முடி செய்தியாளரிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் 500 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் செவிட்டு காதில் விழும் வகையில் விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நலனை தெரியாத, விவசாய முதல்வர்ர் பழனிசாமி இதனை வரவேற்றுள்ளார். விவசாய விளைபொருளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்து வரும் நிலையில், இந்த சட்டத்திருத்தம் காரணமாக இனிமேல் அரசு விலை நிர்ணயம் செய்ய முடியாது.
 விளை பொருளை வாங்கும் பெரிய நிறுவனத்தினர் தான் இதனை முடிவு செய்வார்கள். இதனை எதிர்த்து மத்திய அரசின் கூட்டணி கட்சி அகாலிதளம் தீர்மானம் போட்டுள்ளது.

விவசாய விரோத சட்டத்தை எதிர்த்து போராடி வருவதால், மத்திய அரசு அதனை திரும்பப்பெற வேண்டும். தமிழகத்தில் விவசாய ஊக்க நிதி திட்டத்தில் 6 லட்சம் போலி பயனாளிகள் சேர்த்து, 110 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்துள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் துணை இல்லாமல் நடந்திருக்க முடியாது. இதனால் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை சரியாக இருக்காது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.