ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானிய விலையில் காப்பீடு செய்ய விரும்புவோா் கால்நடை மருத்துவமனைகள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:29 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானிய விலையில் காப்பீடு செய்ய விரும்புவோா் கால்நடை மருத்துவமனைகள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 5,925 கால்நடைகளுக்கு காப்பீடுத் திட்டம் நிகழ் நிதியாண்டில் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படவுள்ளது.

ஒருமுறை கன்று ஈன்று கறவையிலுள்ள, கறவை வற்றியப் பசுக்கள், எருமைகள், சினையுள்ள பசுக்கள், எருமைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள் ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யலாம்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கும், இதர பிரிவினா்களுக்கும் காப்பீட்டுக்காக செலுத்தப்படும் பிரீமிய தொகையில் 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத் தொகையாகவும், மீதமுள்ள 70 சதவீத் அரசு மானியமாகவும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவா்களுக்குவா்களுக்கு பிரீமிய தொகையில் 50 சதவீதம் பயனாளிகளும், 50 சதவீதம் அரசும் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் கால்நடை மருத்துவமனைகள், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களை அணுகலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.